மேட்டுக்கடை - குண்டடம் இடையே 4 வழிச்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!

பல்லடம் - தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை ரூ.53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



திருப்பூர்: மேட்டுக்கடை முதல் குண்டடம் வரையிலான இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.



நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் -தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை ரூ.53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்யப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக பல்வுறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை 53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்யப்பட்டதை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.



திருப்பூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் (SH-174A) மொத்த நீளம் 29.40 கி.மீ இருவழிச்சாலையாகும்.



இச்சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 13.00 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.93.90 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...