தாராபுரத்தில் சாக்கடை கழிவால் துர்நாற்றம் - பொதுமக்கள் சாலை மறியல்!

தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் மற்றும் சூளைமேடு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றதாகவும், இதனால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே, குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு கொட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரத்தை அடுத்துள்ள உப்புத்துறைபாளையம், சூளைமேடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து இந்த பகுதியில் கொட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.



இதனால், துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நேற்று மதியம் 3:00 மணியளவில், தாராபுரம் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமதானம் செய்தனர்.

மேலும் அங்கு வந்த தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாலைக்குள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த மறியல் போராட்டத்தில், வி.சி.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தமிழ் வேந்தன், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், நகர பொருளாளர் கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....