நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 29வது நாளாக தாராபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!!

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 29-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தமிழர் முன்னணி இயக்கப் பொதுச் செயலாளர் இமயம் சரவணன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த காணிக்கை கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகள் கூறியவாறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரையின்படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.



இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமலே இறந்துவிட்டனர். இருப்பினும் தற்போது உள்ள 150 விவசாயிகள் கோனேரிப்பட்டி பகுதியில் கடந்த 29 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்று 29-வது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகளுடன் தமிழர் முன்னணி இயக்க பொதுச்செயலாளர் இமயம் சரவணன் விவசாயிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....