வனத்தியாகிகள் தினம்..!! கோவையில் பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களுக்கு அதிகாரிகள் மலர் அஞ்சலி.!

வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த பாலன், ரவிராஜன் ஆகிய இரண்டு பேருக்கும் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனத்துறையில் பணியாற்றி பணியின் போது வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.11 தேசிய வனத்தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த ஆண்டு யானை தாக்கி உயிரிந்த பாலன், காட்டு மாடு தாக்கி உயிரிழந்த ரவிராஜன் ஆகிய இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.



கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிந்த ஊழியர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...