ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார்

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கோவை: காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.



கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கடந்த 15 நாட்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தினபுரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட GPM நகர், பூம்புகார் நகர், சேவா நகர் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேற்றி உள்ளது.

நேற்று பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பு காலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க திருடர்கள் முயற்சித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரும்பளவில் அச்சம் அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர். இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கரும்புக்கடை பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பாக ஒரே சமயத்தில் இருசக்கர வாகனங்கள் திருடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...