தாராபுரம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்த சோகம்!

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியில் வசிக்கும் ஹக்கீம் மற்றும் ஆதிதா தம்பதிக்கு சொந்தமான 20 ஆடுகள் கட்டப்பட்டிருந்த பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில் 2 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.காளிபாளையம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிப்பதும் தெருவில் செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், காளிபாளையத்தை சேர்ந்த ஹக்கீம் என்பவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆதிதா, 20 ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலையில் ஆடுகளை காட்டில் மேய்த்த பின்பு இரவு வீட்டிற்கு அருகில் உள்ள பட்டியில் 20 ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர். இரவு ஒரு மணிக்கு ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹக்கீம் உடனடியாக பட்டியை சென்று பார்த்த போது அங்கு 10க்கும் மேற்பட்ட நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தன.



நாய்களை விரட்டியடித்த பின்னர், ஆடுகளை பார்த்த போது நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன. மேலும் இரண்டு ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஆதிதா கூறுகையில், தாராபுரம் குறிப்பாக கொளத்துப்பாளையம் வட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை பெரும்பாலும் ஆடுகளை குறி வைத்து இரவு நேரங்களில் பட்டியில் புகுந்து வேட்டையாடுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஆடுகளை நம்பி பிழைப்பு நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்கவோ அல்லது சுட்டு தள்ளவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...