துடியலூரில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவிய திமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டு!

துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் ஒரு பகுதியான அண்ணா பிறந்தநாள் விழாவில், ஏழை கல்லூரி மாணவியின் கல்லூரி படிப்பிற்கு உதவும் வகையில் அவருக்கு தேவையான பாட புத்தகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



கோவை: துடியலூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவியாக பாடப்புதகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் உள்ள திமுக மன்றத்தில் துடியலூர் பகுதி கழக திமுக சார்பில் முதல் நிகழ்வாக அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதிக் கழகச் செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரூருவப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர் தூவி மரியாதை செய்தனர்.



தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வரும் துடியலூரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான துரைசாமி – சரஸ்வதி ஆகியோரின் மகளான சங்கீதாவிற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை கருதி திமுக இரண்டாவது வட்ட துணைசெயலாளர் தமிழ்நிதி கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லூரி படிப்பிற்க்கு தேவையான புத்தகங்களை வருகிறார்.

அதேபோல் இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் மாணவியின் தாயாரிடம் இறுதி ஆண்டிற்கான புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் கலைஞரின் மகளிர் உரிமை கிடைத்துள்ளதால் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, நிர்வாகிகள் ரேவதி, ராமசாமி, ஆறுச்சாமி, அருக்காணி, மாரியப்பன், நாராயணன், சோபனா, அன்பழகன், பழனிச்சாமி, சுப்பிரமணி, கோவிந்தன், செல்வராஜ், சின்னசாமி, தனபாக்கியம், வெற்றி செல்வி, சோமசுந்தரம், பிரபாகரன், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...