கோவையில் ரஜினியை பார்த்து வைஃபான ரசிகர்கள் - ஏமாற்றாமல் காரின் டாஃப்பை திறந்து வெளியே வந்த்தால் ஆரவாரம்

சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் சௌந்தர்யா குழந்தைக்கு இன்று முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்தை பார்த்து ரசிகர்கள் வைப்பாகினர்.



கோவை: நட்சத்திர விடுதியில் இருந்து காரில் வெளியே வந்த ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தலைவர் தரிசனம், தலைவர் நிரந்தரம் என்பது போல வைபாகி அவரது காரை துரத்திச் சென்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவும் கோவை சூலூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இன்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் குழந்தை வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியின் முதலாவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை செல்வதற்காக நட்சத்திர விடுதியில் இருந்து சிட்ரா விமான நிலையத்திற்கு சென்றார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் விடுதியில் தங்கியிருந்ததை அறிந்த அவரது ரசிகர்கள், அங்கு குவிந்தனர்.



ரஜினியின் கார் விடுதியில் இருந்து வெளியே வந்த போது, வாயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.



ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் காரின் டாஃப்பை திறந்து வெளியே வந்து கையசைத்தவாறு சென்றார். ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தலைவர் தரிசனம், தலைவர் நிரந்தரம் என்பது போல வைபாகி அவரது காரை துரத்திச் சென்றனர்.

அப்போது அவிநாசி சாலையில் பேருந்தில் செல்பவர்களும் ரஜினியை கண்டு ஆரவாரம் செய்தனர். நடிகர் ரஜினி காரிலிருந்து வெளியே வந்து சென்ற காட்சிகளை படம் பிடித்த ரசிகர்கள், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...