தாராபுரம் அமராவதி ஆற்றில் முதல் கட்டமாக 40 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 40 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதற்கட்டமாக 40 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் விஜர்சன ஊர்வலம் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி அமைப்பு சார்பில் நடந்தது.



இந்து மக்கள் கட்சியினர் தாராபுரம் நகர வீராட்சிமங்கலம், தளவாய்பட்டிணம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்திய 29 விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர், தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் அணிவகுத்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மதியம் 1 மணி அளவில் இமக மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சஷ்டி சேனா இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி பேரணியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி சாலை வழியாக வழியாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அமராவதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு சிலைகளாக பெற்று தீயணைப்பு துறையினர் கரைத்து விஜர்சனம் செய்தனர். இதேபோல, தாராபுரம் நகர ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில்11 சிலைகளையும் தாராபுரம் உடுமலை சாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



இதையடுத்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரசாமி தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அமராவதி ஆற்றுங்கரையை அடைந்தனர்.



இதையடுத்து, 11 சிலைகளுக்கும் அங்கு சிறப்பு பூஜை செய்து போலீசார் முன்னிலையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், தலைமையில் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகளை வீரர்கள் மாலை 4 :30 மணி அளவில் கரைத்தனர். இதனை முன்னிட்டு தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உட்பட நகரம் முழுவதும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...