டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - யானைகளுக்கு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி முகாமில், 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா முன்னிலை வகித்தனர். உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வரிசையாக யானைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், விநாயகப்பெருமானுக்கும், யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...