திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் -1001 விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆயிரத்து ஒரு பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை என ஆயிரத்து ஒரு விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.



திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் 1001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு வழிபாடுகள் செய்யபட்டன.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விசர்சன ஊர்வலம் மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டது.



அதில் பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், உள்ளடக்கிய ஆயிரத்தி ஒரு விநாயகர் சிலைகள், புதிய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அனைத்து சிலைகளும் மங்களம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...