அத்திக்கடவு தண்ணீர் வரவில்லை - சூலூர் கிராம மக்கள் 3 மணி நேரம் சாலை மறியல்

அத்திக்கடவு திட்டம் தண்ணீர் கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலையில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் மக்கள் மறியல் காரணமாக திருச்சி- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. ஊராட்சி தற்போது புதிய குடியிருப்புகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள்

இந்நிலையில் இவர்களுக்கு அத்திக்கடவு தண்ணீர் மூலம் குடிநீர் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரானது 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் வரக்கூடிய சூழல் உள்ளது.

இதனால் அதிக தூரம் சென்று தண்ணீரை பிடித்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இங்கு தண்ணீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் திருச்சி பொள்ளாச்சி சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கையில் காலி குடத்துடன் திருச்சி மற்றும் பொள்ளாச்சி சாலையை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வரும் வரை கலைய மாட்டோம் எனக்கூறி போலீசாரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில் நின்று உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...