காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் - செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கொடியேற்றி துவக்கி வைத்தார்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் காங்கேயத்தில் திமுக பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நடைபெற்றது. 14 திமுக மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 14,411 பூத் முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பூத் முகவர்களின் பங்களிப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.



பூத் முகவர்கள் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...