கோவையில் நம்ம ஊரு சந்தை - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்

கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒன்றினைத்து இயல்வாகை என்ற அமைப்பு தனியார் பள்ளியுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.



கோவை: கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள செயிண்ட் ஜான் பள்ளி, மாணவ மாணவிகளிடையே இயற்கை சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது. இதற்கென பிரத்யேகமாக பள்ளி வளாகத்திலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இயற்கை வழியிலான காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் பயிரிடுவது, பயன்படுத்துவது குறித்து கற்பித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இயல்வாகை என்ற அமைப்புடன் இணைந்து இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் நம்ம ஊரு சந்தை என்ற நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாஸ்கர் வரவேற்று பேசினார்.



ஒடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் பாரம்பரிய மருத்துவர் மரியா பெல்சின் இயற்கைவழி உணவுப் பொருட்கள் குறித்து விளக்கினார்.



தொடர்ந்து நடந்த சந்தையில் 50க்கும் மேற்பட்ட இயற்கைவழி வேளாண் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் வகையில் தாங்கள் தயாரித்த செக்கு எண்ணெய் வகைகள், கொல்லி மலை இஞ்சி,முடவாட்டுக்கால் கிழங்கு உள்ளிட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சிறுதானிய அரிசி வகைகள், இனிப்பு வகைகள், பனை ஓலை விளையாட்டு பொருட்கள், நீரா பானங்கள், பல்வேறு கீரைகளில் தயாரிக்கப்பட்ட தேனீர் உள்ளிட்ட இயற்கை வழிப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.



இதில் இயற்கை தொடர்பான புத்தகக் கண்காட்சி, நிகர் கலைக்கூடத்தின் பறையிசை முழக்கம், பேராசிரியர் ராமராஜின் நாடகம், தாமரைச் செல்வனின் ஓரிகாமி காகிதக் கலை, மரப்பாச்சி முருகனின் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இறுதியில் இயல்வாகை அமைப்பின் தலைவர் அழகேஸ்வரி அசோக் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...