நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் - தாராபுரத்தில் 43வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் கோனாரிபட்டி அருகேயுள்ள நல்லதங்கள் அணைக்கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டு கேட்டு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 43வது நாளில் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலத்திற்கு இழப்பீடு வழங்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என நல்லத்தங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்காள் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவதற்காக 97 விவசாயிகள் 850 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். இதற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.



43வது நாளான நேற்று மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...