உடுமலையில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

உடுமலைபேட்டையில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு பேரணி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு, மடத்துக்குளம் வழக்கறிஞர்கள் சங்கம், பிரியா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் டாக்டர்.அப்துல்கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை சார்பில்போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மடத்துக்குளம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து இந்த பேரணிதுவக்கி வைக்கப்பட்டது.



மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் புகையிலை ஒழிப்பிற்கான உறுதிமொழியை வாசித்தபின் பேரணியை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில் வழககறிஞர்கள் நாகமணிக்கம், அன்பு, சிவகுமார், பழ. முருகேசன், தமிழினியன் ஆகியோரும், காவல் துறை சார்பில் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் இசக்கி,.திருவெங்கடேசன், சக்திவேல், ராஜ்குமார், குணசேகரன், இப்ராஹிம் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

பேரணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 170 பேர் கலந்து கொண்டனர்.

பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கி பழனி-உடுமலை சாலை பேருந்து நிலையம், நான்கு வழி சந்திப்பின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் முடிக்கப்பட்டது.

மாணவ மாணவிகள் வழிநெடுகிலும் புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...