தாராபுரம் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தாராபுரத்தில் நடைபெற்ற  பூத் கமிட்டி கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெறுவது மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சென்னை பாலு தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



தாராபுரம் மேற்கு ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாத்தம் சார்பில் தாராபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளருக்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் எனவும்,அதிமுகவில்புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு பொறுப்பாளர்களும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...