உடுமலை அருகே இலவச மருத்துவ முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

உடுமலை அருகே முக்கோணம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் பலர் பங்கேற்று பயன் பெற்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் கு.சி மணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் வரவேற்புரை வழங்கினார்.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் இளங்கோவன் வெற்றியின் முதல் படி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் ப கணபதி நாளைய பாரதம் நமதே என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிரியா நர்சிங் முதல்வர் எம் தவசு மணி தலைமையில் 12 பேர் கொண்ட குழு சர்க்கரை நோய் வியாதி கண்டறிதல், ரத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முதலான பல்வேறு பரிசோதனைகளை முக்கோணம் பொதுமக்களுக்கு செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்படுத்தி முகாமை பயன்படுத்தி கொண்டனர். நர்சிங் கல்லூரி துணை முதல்வர் மேனகா, இயற்கை உணவுகளும், இனிய வாழ்வும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நோய் நொடிகள் அன்டாதவாறு நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் அவர் விளக்கி கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...