உடுமலை ஓன்றியத்தில் கிராம சபைக்கூட்டம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு

உடுமலை ஒன்றியங்களுக்கு உடபட்ட பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஓழிப்பது, துய்மை பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: காந்தி ஜெயந்தியையொட்டி உடுமலை ஓன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.



பெரிய கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாகவும், வடகிழக்கு பருவ மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கை குறித்தும் பொது சுகாதாரம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.



எனது குப்பை எனது பொறுப்பு என் கிராமத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருப்பது எனது கடமை என அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இதே போல போடிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் அப்போது ஊராட்சிகள் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



பின்னர் தூய்மை உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.



இதேபோல சின்னவீரன்பட்டி ஊராட்சியில் மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...