உடுமலை திருமூர்த்தி மலையில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு

உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் அவர்கள் கூறியதாவது திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 2049மீட்டர் உயரத்தில் உள்ள பிச்சிச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளிலிருந்து உற்பத்தியாகி பல கிளை ஓடைகள் சேர்ந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலைகாடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்களின் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.



இதுபோன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே. எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாய கடமை ஆகும் என்று கூறினார். உடுமலை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....