தீ விபத்திற்கு இழப்பீடு கோரி கருப்புக் கொடி - தாராபுரம் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

குப்பைகளை எரிக்க வைக்கபடும் தீயால் வைக்கோல் தீப்பற்றி எரிந்து சேதமான விவசாயிக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி வந்து கோரிக்கை வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பொது மக்கள் கருப்பு கொடி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சம்பத் நகர் பூங்காவில் தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஒ சிவகுருநாதன் கிராமஊராட்சி, எ.பி.டி.ஒ இசக்கிமுத்து, துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் பொதுமக்கள் சார்பாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. மேலும் வரவு, செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் பஞ்சாயத்து பகுதி முழுவதும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.

அலங்கியம் ரோடு ராம் நகர் பகுதியில் தூய்மைபணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைத்ததால் ஒரு விவசாயின் வைக்கோல் எரிந்து சேதமானது. அதற்கு நஷ்ட ஈடு கேட்டு கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் வந்து தலைவர் செல்வியிடம் சரமாரி கேள்வி கேட்டனர்.



மேலும் தீ விபத்து சம்பந்தமாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி மன்ற தலைவி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் டெங்கு பராவல் தடுப்பு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்பட-21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...