மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்.3 கோவை பயணம்

அக்டோபர் 3 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


கோவை: கோவைக்குஅக்.3 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் வருகை தர உள்ளார்.

கோவைக்கு ஒருநாள் பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தர உள்ளார்.

கோவைக்கு வருகை தரும் அவர் பீளமேட்டில் நடைபெறும் துய்மை பாரதம் திட்ட விழாவில் பங்கேற்கிறார்.

இதையடுத்து கோவை இந்திரா நகரில் எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கியின் புதிய கிளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இதன் பின்னர் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியின் கடன் திட்ட முகாமை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைக்கிறார்.

இதைதொடர்ந்து கொடிசியாவில் பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

இதன் பின்னர் பிற்பகலில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

இதை தொடர்ந்து மாலை கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களிடம் அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...