தமிழக தொழிலாளர்களுக்கு பின்னலாடை தொழிலில் ஈடுபாடு இல்லை - திருப்பூர் சக்திவேல் பேட்டி

தமிழகத்தில் இலவச அரிசி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதன் மூலம், பின்னலாடை உற்பத்தி தொழிலில் அதிக ஈடுபாடு இல்லாததால் வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.


திருப்பூர்: நூல் விலை ஏற்றம் குறித்து தீர்வு காணும் வகையில் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நூல் மில் அதிபர்கள் மற்றும் பஞ்சு வியாபாரிகள் அடங்கிய கூட்டு கமிட்டியை ஏற்படுத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.



திருப்பூரில் வருகின்ற 12ஆம் தேதி 50 வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி துவங்கப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு திருப்பூரில் நடைபெற்றது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் திருப்பூர் சக்திவேல் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உலக அரங்கில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் திருப்பூரை முன்னிலைப்படுத்தும் வகையில் திருப்பூரில் நடைபெற உள்ள ஐம்பதாவது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி அமையும்.

இதற்கான வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலை தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் கூடிய வகையில் உற்பத்தி செய்து அதனை காட்சிப்படுத்த ஆயத்தை ஆடை கண்காட்சியை பயன்படுத்த இருக்கிறது.

இது ஏற்றுமதியாளர்களுக்கும்,வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாத உற்பத்தியாளர்களுக்கும் மிகச் சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் கடந்த ஐந்து மாதங்களில் 14,000 கோடி அளவிற்கு நடைபெற்று இருக்கிறது. வரும் நாட்களில் அவை இன்னும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 10 முதல் 20% வரை அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.

வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு தமிழக அரசு தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலமும், 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதன் மூலமாகவும் பின்னலாடை உற்பத்தி தொழிலில் அதிக ஈடுபாடு இல்லாததால் வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தக்கூடிய நூல் விலை ஏற்றம் குறித்து தீர்வு காணக்கூடிய வகையில் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நூல் மில் அதிபர்கள் மற்றும் பஞ்சு வியாபாரிகள் அடங்கிய கூட்டு கமிட்டியை ஏற்படுத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நூல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்த இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு தொழில் அமைப்பின் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...