தாராபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் கலந்துரையாடல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாமகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி அதிமுக கைவிட்டது. ஆனால் இனி தாராபுரம் தொகுதி அதிமுகவின் இரும்பு எஃகோட்டையாக இருக்க வேண்டும் என்று பூத் கமிட்டி கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பாசறை மகளிர் அணி நிர்வாகிகள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாமகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (என்கிற) பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

இதில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பாசறை மகளிர் அணி நிர்வாகிகள் பேசுகையில்,வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அடுத்த சட்டமன்ற தேர்தலானாலும் சரி தாராபுரம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதி அதிமுக கைவிட்டது. ஆனால் இனி தாராபுரம் தொகுதி அதிமுகவின் இரும்பு எஃகோட்டையாக இருக்க வேண்டும்.



அதை கட்டமைக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அப்படி அமைக்கப்படும் அதிமுக இரும்பு எஃகோட்டையை இனிவரும் எந்த ஒரு கட்சியினரும் உடைக்க முடியாத அளவிற்கு பலமானதாக உருவாக்க வேண்டும். எனவே தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கரத்தை வலுப்படுத்தி அவரை மீண்டும் முதலமைச்சராக அமர்த்த அனைவரும் பாடுபடுவோம் என இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர இலக்கிய அணி செயலாளர் கிளை செயலாளர் மாதவன்ஒருங்கிணைப்பில் மாவட்ட இணை செயலாளர் திருப்பூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் சத்யபாமா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி குமார், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கௌரிசித்ரா முருகேசன், மாவட்ட பாசறை தலைவர் சிவசுகுந்தன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் பா.ரா அரசகுமாரன், நகர அம்மா பேரவை செயலாளர் ராமசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ், பிரதிநிதிகள் கோல்டன் ராஜ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...