திருமூர்த்தி அணையில் புதர் மண்டி காணப்படும் பூங்கா - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் திருமூர்த்தி அணை பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.



குறிப்பாக இப்பகுதியில் பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி மலை அவணலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணைப்பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன.

பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் இருக்கைகள் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ள காரணத்தால் பூங்காவை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...