உடுமலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பழம் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

உடுமலையில் தனியார்-அரசு பள்ளிகள் மற்றும் ரோட்டரி அமைப்புடன் இணைந்து பழம் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: மரக்கன்றுகள் நடும் விழாவில் கோவில் வளாகம் மற்றும் பூங்காவளாகங்களில் பயன் தரும் பழம் தரும் விதைகள், செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் உடுமலை தேஜஸ் ரோட்டரி அமைப்புடன் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு நாள் நிகழ்வாக அனுஷம் நகர் விநாயகர் ஆலய வளாகம் மற்றும் பூங்காக்களில் பழம் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் லோகேஸ்வரி மற்றும் செயலர் சம்பத்குமார் முன்னிலையில் உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்று பேசினார்.

கோவில் வளாகம் மற்றும் பூங்காவளாகங்களில் பயன் தரும் பழம் தரும் விதைகள் மற்றும் செடிகள் நடவு செய்யப்பட்டன. இயற்கையை வணங்குவோம் என்ற தலைப்பில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் உரை நிகழ்த்தினார்.

கோவில் வளாகம் முழுவதும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி ஒருங்கிணைக்க உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் சுமதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹம்சத் முகைதீன் நிகழ்வினை ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...