ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பொது துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.


கோவை: பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை-பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள்,அதிகாரிகள்,வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 1995ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் இணைத்திட வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும், ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மேம்படுத்திட வேண்டும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும்" ஆகிய ஏழு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...