வின்ஸ்டார் நிறுவனத்தின் 200 கோடி மோசடி வழக்கு - 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை வழங்க உள்ள போலீசார்

சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் 15 லட்சம் பக்க கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை போலீசார் இன்று குற்றவாளிகளுக்கு வழங்க உள்ளனர்.


கோவை: சற்று நேரத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 30 பேருக்கும் தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் வழங்க உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனம் சிவகுமார் என்பவரால் 2017ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதில் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.

இதை நம்பி சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் 1,686 பேர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் உரியவர்களுக்கு அவர் பணம் தராததால் இது இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது.

இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அதன்படி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இதில் 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் வழங்க உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...