தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் - பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பல்லடத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் போல் நடைபெறாமல் இருப்பதால்தான் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும்.அதற்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும். மக்களிடத்தில் அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகளை தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கூட்டணி குறித்து கழக பொதுசெயலாளர் முடிவு செய்வார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் காவல்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் எந்த காவல் நிலையம் பகுதியில் அதிக குற்றங்கள் நிகழ்கிறது என கண்டறிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டறிந்து அதன் மூலமாக அப்போதைய முதல்வரிடம் எடுத்துரைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் தற்போது இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் சரியாக நடைபெறததால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்களை பொதுச்செயலாளர் ஆலோசனையின்படி மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பகுதி செயலாளர், உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...