மதிப்பெண் திருத்தி வழங்குவதில் தாமதம் - உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தாமதம் செய்வதாக கூறி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தவறாக உள்ளதாகவும், மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.



இது குறித்து பல முறை கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் தரப்பில் கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்து தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மாணவர்கள் கூறும் பொழுது, மூன்று மாத காலமாக மதிப்பெண்கள் திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...