மருதமலை மலைப்பாதை சீரமைப்பு - போக்குவரத்துக்கு தடை விதித்த கோவில் நிர்வாகம்

கோவை மருதமலை மலைப்பாதை பழுது நீக்கி செப்பனிடும் பணி நடைபெற இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மருதமலை மலைப்பாதை சீரமைப்பு பணி நடைபெறுதால் போக்குவரத்துக்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய மின்தூக்கி (LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச் சாலையில் உள்ள தார் சாலைகள் சீரமைத்தல் பணி, திருக்கோயிலின் மலை மேல் புதியதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, திருக்கோயிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதியதாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் திருக்கோயில் தங்கரதம் உலாவரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.



இதனால் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப் பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதையும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருதமலை திருக்கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...