பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் - விவசாயிகளுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-24 ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட 2016-17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி தற்போது விவசாயிகள் ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சோளம் மக்காசோளம் மற்றும் கொண்டைகடலை பயிர்களுக்கு தற்போது அறிவிக்கை பயிர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வருடம் யுனிவர்சல் சாம்போ பொதுக்காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆகவே,கோவை மாவட்ட விவசாயிகள் அக்டோபர் 2023 முதல் சாகுபடி செய்யப்படும் சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.144.75/- கட்டணமாக செலுத்தி 15.12.2023 வரையிலும், கொண்டை கடலைபயிருக்கு ஏக்கருக்கு ரூ.210/- செலுத்தி 15.11.2023 வரையிலும் மற்றும் மக்காசோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.519.75/- கட்டணமாக செலுத்தி 15.11.2023 இறுதிவரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்காக விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் எண் அட்டைநகல், வங்கிகணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியஆவணங்களுடன் பொது இ- சேவைமையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு, கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்காப்பீட்டிற்கான பிரிமியத் தொகையினை செலுத்தி பதிவு செய்யலாம்.

மேலும் பயிர்காப்பீடு தொடர்பான விவரங்களைப் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...