கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரியினங்கள் செலுத்துதல் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், பாலுாட்டும் அறை இல்லாததால் தாய்மார்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் நடந்தது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சென்ற நிலையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் சிரமப்பட்டதை அறிந்து, மேடைக்கு பின்புறம் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிலையில், அலுவலக வளாகத்தில் இருக்கும் பொது மக்கள் காத்திருப்பு அறையில், கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...