கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கோவையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.


கோவை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை நகர வள மையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



இம்முகாமில் உடல் இயக்க குறைபாடு, கண் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மன வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.



தேவைப்படும் குழந்தைகளுக்கு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.



மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு, ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை படிவங்களும் வழங்கப்படுகின்றன.

52 பேருக்கு உதவி உபகரணங்களும், 25 பேருக்கு காதொலி கருவியும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் இம்முகாமிற்கு கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று செல்கின்றனர். இங்கு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...