சென்னையில் ஆசிரியர்கள் கைதுக்கு எதிர்ப்பு - கோவையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்துள்ளதாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் கைது நடவடிக்கை கண்டித்தும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தராஜ், சுதாகர், விக்டோரியா, அருணா, கிருத்திகா உள்பட 250 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...