‌தாராபுரத்தில் ஒற்றுமை மேடை கூட்டம் - மத அடிப்படையில் மக்களை பாஜக பிளவுப்படுத்துவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருவதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.



இந்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தெனரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வு கூடத்தில் அவர் பேசியபோது,

உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருகின்றனர். அதன் நோக்கம் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களே என நிறுவுவதற்குதான். அப்படி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பதாகும்.



எனவே மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்று பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடும் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், வழக்கறிஞர் திருப்பூர் மோகன், தாராபுரம் ஒருங்கிணைப்பாளர் கம்யூனிஸ்ட் கனகராஜ், விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், தி.க வழக்கறிஞர் சக்திவேல், திராவிட கழகத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்,சண்முகம், படிப்பகம் ராஜாமணி, தீர்க்கதிர் இராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...