‌விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை - கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நகல் ரேஷன் கார்டு பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு இருவாரத்தில் தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை வீடு தேடி வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில், 10 ஆயிரம் ரேஷன் கார்டு நகல் அச்சிடப்பட்டு, விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன. கார்டுதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தேர்ந்தெடுத்து, பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணை உள்ளீடு செய்தால், ஒருமுறை 'பாஸ்வேர்டு' அனுப்பப்படும்.

அதை பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம். நகல் அட்டைக்கான கட்டணம் ரூ.20, அஞ்சல் வழி பெறுவதற்கு ரூ.25 என, 45 ரூபாய் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து, ஒப்புகை பக்கம் மற்றும் பணபரிவர்த்தனை குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இரு வாரத்துக்குள் நகல் ரேஷன் கார்டு, விண்ணப்பதாரர் முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக அனுப்பப்படும்.ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்திருந்தாலோ அல்லது முகவரி திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் ஆகிய திருத்தங்கள் செய்தபின், நகல் கார்டு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம். நகல் கார்டு அச்சிட்டு வழங்க தனியார் நிறுவனத்துக்கோ, தனி நபருக்கோ எவ்வித அனுமதியும் அரசால் வழங்கப்படவில்லை என, ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...