‌‌ யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமியின் வைரல் வீடியோ காட்சிகள்

கோவை பேரூர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைகள் பற்றி நேயா என்ற பள்ளி மாணவி பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரவேற்பை பெற்று வருகிறது.


கோவை: யானையை நாம் பாதுகாக்க வேண்டும். யானை காட்டை உருவாக்குகிறது. காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகள் நன்றாக இருக்கும் என்று பேசிய பள்ளி மாணவி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உறுதிமொழியும் எடுக்க வைத்தார்.

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார் பள்ளி மாணவி யானைகளைப் பற்றி அபாரமாக பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் விநாயகரை கும்பிடுவோம். விநாயகர் யானை ரூபம் கொண்டவர். யானையை நாம் பாதுகாக்க வேண்டும். யானை காட்டை உருவாக்குகிறது. காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகள் நன்றாக இருக்கும். மற்ற விலங்குகள் நன்றாக இருந்தால் பறவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும். பறவைகள் நன்றாக இருந்தால் மழை பெய்யும். நன்றாக மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும்.

விவசாயம் இருந்தால் சாப்பாடு நமக்கு கிடைக்கும். சாப்பாடு இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆகவே யானை நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து யானைகள் பாதுகாப்போம் என தெரிவித்தார்.யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதி மொழியையும் எடுக்க வைத்துள்ளார். தற்போது அச்சிறுமி பேசிய காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...