கறிக்கோழி விற்பனை சரிவடைவதால், கொள்முதல் விலை சரியும் பண்ணையாளர் அச்சம்

புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை சரிந்து வருவதால் கொள்முதல் விலை விழ்ச்சி அடையும் ஆபத்து இருப்பதாக கோவை, திருப்பூர், ஈரோடு கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்


கோவை: கறிக்கோழி விற்பனை சரிவு கோழி பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில், கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம் ஒரு கோடி கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும், வாரம், 50 லட்சம் கோழிக்குஞ்சுகள் விற்பனையாகி வருகின்றன.

கேரளாவில், தொடர் மழை காரணமாக, 20 சதவீதம் வரை கறிக்கோழி விற்பனை சரிவடைந்து வருகிறது. இதுதவிர, விழாக்கள், பண்டிகைகள் காரணமாகவும் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில், புரட்டாசி மாதம் என்பதால், அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவும் விற்பனை குறைவதற்கான காரணமாக உள்ளது.தற்போது, கொள்முதல் விலை, கிலோ 108 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ளதால், அதற்கு ஏற்ப உற்பத்தியும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவு காரணமாக, வரும் நாட்களில் கொள்முதல்விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போதுள்ள தீவன விலை, ஆள் கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கறிக்கோழிகளின் அடக்க விலை, 100 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. கொள்முதல் விலை மேலும் குறைந்தால், பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர் அச்சம் தெரிவித்தார்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...