வரும் 16ம் தேதி சென்னையில் உண்ணாநிலை - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோரிக்களை நிறைவேற்றாவிட்டால், வரும் 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



பீக் அவர் உட்பட தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மாதம் கோவை காரணம்பேட்டை பகுதியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட அவர்கள் தொடர்ந்து முதலமைச்சருக்கு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்களை அனுப்பினர்.

கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கதவடைப்பு போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.



கோவையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமை வகித்தார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கருப்பு பேட்ச் அணிந்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்திருந்த அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்திக்க வேண்டும் என தெரிவித்ததால் காவல்துறையினர் அவர்களை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலையும் காவல்துறையினர் அடைத்ததால் தொழில் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முக்கிய நிர்வாகிகள் சுமார் 20 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...