திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடிப்பு - 5 பேர் காயம்

திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாராபாளையம் அடுத்த வடக்கு தோட்டம் பகுதியில் ஜெயரத்தினம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மங்களூரைச் சேர்ந்த பிரதீப் செட்டி. இந்த நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். அப்பொழுது, அயனிங் செக்சன் இன்சார்ஜ், மணிகண்டன் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் உற்பத்தி செய்த பனியன்களை அயன் செய்வதற்காக அயனிங் பாயிலரை ஆன் செய்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அயனிங் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கண்ணதாசனுக்கும், குமார் வலது புறம் நெத்தியில அங்கு பணியாற்றிய வட மாநில தொழிலாளி பாபு நரேன் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மணிகண்டன் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் அருகில் இருந்த இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் காயம் பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...