தாராபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை பணி - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

தாராபுரம் நகராட்சி 4-வது வார்டு பகுதியில் பல ஆண்டு காலமாக மக்கள் சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என அவர் கூறினார்.

அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராஜாத்தி பாண்டியன், 4-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், வார்டு அவைத்தலைவர் சென்னியப்பன், வார்டு பிரதிநிதிகள் ஆறுச்சாமி, மகாலட்சுமிரத்தினம், வாக்குச்சாவடி முகவர் குணசேகரன், பெரியசாமி, பாலகிருஷ்ணன், முனியப்பன், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...