மதுரை முதன்மை சுகாதார அலுவலருக்கு எதிர்ப்பு - கோவையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


கோவை: மருத்துவர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஆணைகள் பிறப்பிக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி வந்தனர்.அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.



மதுரை சுகாதார அலுவலரின் பணியிடை நீக்கம், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை, மகப்பேறு மரண தணிக்கை பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறித்து முதன்மை சுகாதார அலுவலர் அத்துமீறி உள்ளே நுழைந்து இது சம்பந்தமாக மருத்துவர்களை மிரட்டி உள்ளார்.

மதுரை முதன்மை சுகாதார அலுவலர் மீது மருத்துவமனை நிர்வாகமும்,சுகாதாரத் துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

முதன்மை சுகாதார அலுவலர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 6 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 2 மருத்துவர்களை வைத்து இரவு பகலாக வேலை வாங்குவதாக சுகாதார துறை மீது குற்றம் சாட்டினர்.

மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் மருத்துவத்தை தவிர மற்ற வேலைகளை அரசு இவர்களைச் செய்யச் சொல்லி கட்டாயபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் மகப்பேறு மருத்துவர்கள் அதிக அளவில் மன உளைச்சலில் உள்ளதாகவும் 40 மணி நேரம் செய்யக்கூடிய வேலையை 80 மணி நேரமாக செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறினார்.

போராட்டங்களுக்குப் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து அக்டோபர் 16-ம் அன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...