ஆபத்துக் காலத்தில் முதலுதவி - மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர்

நரசிம்மநாயக்கன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து காலத்தில் முதலுதவி செய்வது குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தீ விபத்து ஏற்படும் போது மாணவர்கள் செய்ய வேண்டிய செயல்முறை விளக்கம் குறித்து கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், துடியலூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தம்பு மேல்நிலைப்பள்ளி இணைந்து நாட்டு நல பணி திட்ட முகாமை நடத்தியது.

பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், ஆபத்து காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலுதவி குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், மயக்கமடைந்த நபரை எவ்வாறு மீட்பது, விபத்து காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள், தீயை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...