பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற. இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ் வழங்குதல் தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை உதவி உபகரணங்களுக்கான பதிவு குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை மனநல மருத்துவ ஆலோசனை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகதீசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி வட்டார வளமை மேற்பார்வையாளர் மல்லிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு பயிற்சியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...