கோவையில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை நடைபெற்றது.


கோவை: பேரிடர் காலங்களில் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை நடைபெற்றது.



இந்த ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் 38 தீயணைப்பு துறையை சேர்ந்த பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் மாநகராட்சி மருத்துவக் குழுவினர் மாதிரி ஒத்திகை முதலுதவி சிகிச்சையை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிட்டு பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...