தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் - உடுமலை மாநில நெடுஞ்சாலை மிக குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டிணம், செலாம் பாளையம், ஊத்துப் பாளையம், சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.

முக்கியதுவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை தாராபுரத்தில் இருந்து தளவாய்பட்டிணம் வரை சுமார் 10 கி.மீ. மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளது.

இந்நிலையில் தினசரி இதன் வழியாக நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை சாலையில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத அளவுக்கு பாதை குறுகியே உள்ளது. அத்துடன் எதிரே வாகனங்கள் வழியில்லாமல் சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலையை விரிவுபடுத்த கோரி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தினசரி வாகன விபத்துகளில் சிக்கி உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்- உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...