தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிர்ப்பு - பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி ரத்து செய்யக்கோரி இன்று பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதனிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: தேங்காய் கரித்தொட்டி ஆலையால், விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குடிநீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. எந்தவித அனுமதியும் இன்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீர் பாதிப்பு அடைவதாகவும், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், கூறி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த கறி தொட்டி ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.



இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் தேங்காய் கரி தொட்டி ஆலை அமைப்பதற்கான பணிகள் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலேயே நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி ரத்து செய்யக்கோரி இன்று பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதனிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.



15 வருடங்களாக சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆலைக்கு மீண்டும் அனுமதி அளித்து இருப்பதால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குடிநீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து புகார் மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...