தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு - பொதுமக்கள் அதிருப்தி

சர்வதேச அளவில் நடைபெறும் இஸ்ரேல் - ஹமாஸ் போரால் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: தங்கம் விலை உயர்ந்து வந்தாலும் அடிப்படை தேவைகளுக்காக தங்கத்தை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்குள் ஆடம்பர பொருட்களான தங்கம் வராது என்றாலும், அன்றாடும் பொதுமக்களின் நுகர்வு தங்கத்தில் இருக்கும் என்பதிக் மாற்றுக்கருத்து இல்லை. அதன் அடிப்படையில் கல்யாணம், காதுகுத்து, விழாக்காலங்களான தீபாவளி, பொங்கல், முகூர்த்த நாட்களில் பொதுமக்கள் தங்கம் வாங்குவதனை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். முதலீடாக தங்கம் வாங்குவொர், மார்கெட்டில் தங்கத்தின் விலை குறைகின்ற காலத்தில் வாங்குவர்.

இந்த நிலையில் சமீப காலங்கலாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் பலர், தங்க நகைகளை வாங்கி வந்தனர்.



இந்த நிலையிலே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்திருக்கின்றது. வழக்கமாக 50 ரூபாய் 100 ரூபாய் என ஏற்றம் இறக்கம் காணப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை ஒரே நாளில் உச்சத்தை தொட்டிருக்கின்றன.



சர்வதேச அளவில் நடக்கும் அரசியல் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் தங்கம் விலை உயர்வுக்கு வழி வகுத்திருக்கின்றன. இந்திய வர்த்தகம் அமெரிக்க டாலர் அடிப்படையில் நடப்பதனால், யூ.எஸ். டாலர் பண மதிப்பு ஏற்றம் இறக்கம் தங்கம் விலை நிர்ணயத்தில் பிரதிபலிகின்றன. தமிழ் மாதங்களில் புரட்டாசி முடிந்து ஐப்பசி ஆரம்பமாகின்ற நிலையில், ஏராளமான சுப நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கும். இதற்காக தங்கம் வாங்க நினைப்போர் தற்போது தங்கத்தின் விலை ஏற்றம் கண்டதனால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

திட்டமிட்ட தொகையில் அனைத்து நகைகளையும் வாங்க முடியவில்லை என்றாலும், விசேசங்களுக்கும், விழாக்களுக்கும், அடிப்படை தேவைக்குமான தங்க நகைகளை முதலில் வாங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் விலை ஏற்றம் இறக்கம் இயல்பானது. சர்வதேச அரசியல் இஸ்ரேல் ஹமாஸ் போர், யூ.எஸ். டாலர் உள்ளிட்டவற்றால் தங்கம் விலை முன்பைவிட கணிசமாக உயர்ந்திருக்கின்றன. தங்க நகையின் விலை ஒவ்வொரு வருடமும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. விழாக்களில் பொதுமக்கள் தங்க நுகர்வு நிலையாக இருக்கும் என விற்பனையாளர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...