உடுமலை அமராவதி நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.வ ஜெயராமன், ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், ஶ்ரீ சக்ரா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...